“நான் நன்றாகவே இருக்கிறேன் தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம்”-குப்புசாமி மகள் அதிரடி பதிவு .!

Default Image
  • புஷ்பவனம் குப்புசாமி  தனது மகள் இரவு சண்டை போட்டு விட்டு கோபத்துடன்  காரை எடுத்து சென்றதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக தகவல் வெளியானது.
  • தற்போது நண்பர்களே நான் கடத்தப்பட்டதாகவும் , காணாமல் போனதாகவும் வெளியான அனைத்து செய்திகளும் தவறானது என குப்புசாமி மகள் கூறியுள்ளார்.

பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி , மனைவி அனிதா குப்புசாமி சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் விஸ்வநாதன் தெருவில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பல்லவி மருத்துவராக படித்து வருகிறார்.

புஷ்பவனம் குப்புசாமி அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தனது மகள் சகோதரியிடம் நேற்று இரவு சண்டை போட்டு விட்டு கோபத்துடன் பல்லவி காரை எடுத்து சென்றார்.பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை என புகார் கொடுத்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் திடீர் திருப்பமாக புஷ்பவனம் குப்புசாமி மகள் பல்லவி தனது முகநூலில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார்.அதில் “நண்பர்களே நான் கடத்தப்பட்டதாகவும் , காணாமல் போனதாகவும் வெளியான அனைத்து செய்திகளும் தவறானது. நான் நன்றாகவே இருக்கிறேன் தவறான செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்