இளையராஜாவை ஒருநாள் தியானம் செய்ய அனுமதிக்க முடியுமா என சென்னை உயர்நீதிமன்றம் கேட்ட நிலையில், பிரசாத் ஸ்டுடியோ மறுப்பு தெரிவித்துள்ளது.
இசைஞானி இளையராஜா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார். சமீபத்தில் ஸ்டுடியோவின் உரிமையாளர்கள், இளையராஜாவை வெளியேற்றியதுடன், வழக்கும் தொடர்ந்திருந்தார். இதையடுத்து, தன்னை ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகை கொடுக்குமாறு ஸ்டுடியோ உரிமையாளர்களான சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிட கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சமீபத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இளையராஜா தரப்பில், 40 ஆண்டுகளாக இளையராஜா பிரசாந்த் ஸ்டுடியோவில் பணியாற்றியதால், ஒருநாள் தியானம் செய்துவிட்டு பொருட்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, இளையராஜா பிரசாந்த் ஸ்டுடியோவில் ஒருநாள் தியானம் செய்ய ஏன் அனுமதிக்க கூடாது என்று பிரசாந்த் ஸ்டுடியோவிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இளையராஜாவை ஸ்டூடியோவில் அனுமதிக்க முடியாது என்று பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு வழக்கறிஞரை அனுமதிக்கலாம் என தெரிவித்த நீதிபதி இது குறித்து இரு தரப்பும் நாளை தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதித்தால் இழப்பீட்டை இளையராஜா வலியுறுத்தக் கூடாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…