இளையராஜாவுக்கு பிரசாந்த் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்யவும், உடமைகளை எடுத்து செல்லவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பிரசாந்த் ஸ்டூடியோவுக்கு சென்று தனது சொந்தமான பொருட்களை எடுத்து வர அனுமதி அளிக்க வேண்டும் என இளைஞரான தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம், இளையராஜாவை ஒரு நாள் ஸ்டூடியோவுக்குள் பொருட்களை எடுப்பதற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்சனை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இந்த கேள்விக்கு ஸ்டுடியோ நிர்வாகம் இளையராஜாவை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.
மேலும், இளையராஜாவும் அவரும் உதவியாளர்கள், காவல்துறையினர் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆணையர் ஆகியோரை ஸ்டுடியோவிற்குள் அனுமதிக்கலாமா?என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த ஸ்டுடியோ நிர்வாகம், தங்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை இளையராஜா அவர்கள் வாபஸ் பெறுவதாக தெரிவித்தால், அவரை அனுமதிக்கலாம் என பிரசாந்த் ஸ்டுடியோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பிரசாத் ஸ்டூடியோவில் எந்த ஒரு உரிமையும் கோர மாட்டேன் என்றும், பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும் இளையராஜா மனு அளித்துள்ளார். இதனையடுத்து, பிரசாந்த் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்யவும், உடமைகளை எடுத்து செல்லவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், பிரசாந்த் ஸ்டுடியோவுக்குள் செல்லும் இளையராஜாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…