எந்த இடத்திலும் ஐஸ்வர்யம் உண்டாக சேர்த்து வைக்க வேண்டிய பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில், தொழிலில் தீயவர்களின் பார்வையால் ஐஸ்வர்யம் நிலைக்காமல் இருக்கிறது என்றால் இந்த பதிவை நிச்சயம் பாருங்கள். பொதுவாக எதிர்மறை ஆற்றல் அதிகரித்தால் வீட்டில் பண கஷ்டம், ஆரோக்கிய குறைபாடு போன்றவை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். இந்நிலையில் நேர்மறை ஆற்றலை நீங்கள் இருக்கும் வீட்டில் அதிகரிக்க மற்றும் வீட்டில் ஐஸ்வர்யம் பெறுக இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இதனை செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
முதலாவது, பஞ்ச பூதங்களையும் அடக்கி வைத்து நல்லதை செய்யக்கூடிய பஞ்ச முக ருத்ராட்சம். இரண்டாவதாக, பச்சை கற்பூரம். இதில் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும். மூன்றாவதாக, குங்கும பூ. இது தேவ லோகத்து பூவாக கருதப்படுகிறது. இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக உங்களது பூஜை அறையில் சிறிய தட்டில் ஐஸ்வர்யத்தை அள்ளிக்கொடுக்கும் மகாலெட்சுமி மற்றும் உங்களுக்கு துணையாக நிற்கும் குலதெய்வத்தையும் மனதார நினைத்து வேண்டி கொள்ளுங்கள்.
இந்த மூன்று பொருட்களையும் மஞ்சள் காட்டன் துணியில் வைத்து கட்டி உங்களது பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்து கொள்ளலாம். இது உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் அதிகரிக்க செய்யும். மேலும், இதனை நிலை வாசலில் மேல் கட்டி வைக்கலாம். இதன் மூலமாக உங்கள் வீட்டிற்குள் யாரேனும் தீய எண்ணங்களுடன் நுழைந்தாலோ, பொறாமை பட்டாலோ அவர்களது பார்வையால் உங்களுக்கு எவ்வித தீங்கும் நேராது. இதில் உள்ள பொருட்களை அடிக்கடி மாற்ற வேண்டாம். பச்சை கற்பூரம் கரைந்துவிட்டால் அதற்கு பதிலாக வேறு வைக்கலாம். இந்த 3 பொருட்களை சேர்த்து வைத்து உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் பெறுக செய்யுங்கள்.
கொல்கத்தா : 18 வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. …
சென்னை : இன்று அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்…
கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) -ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் இரண்டாவது பகுதி கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி…
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச்…
சென்னை : வரும் 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதாகவும், இதனால் மக்கள் தொகையை…