இந்த 3 பொருளையும் சேர்த்து வைத்தால் எந்த இடத்திலும் ஐஸ்வர்யம் உண்டாகும்..!

Published by
Sharmi

எந்த இடத்திலும் ஐஸ்வர்யம் உண்டாக சேர்த்து வைக்க வேண்டிய பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில், தொழிலில் தீயவர்களின் பார்வையால் ஐஸ்வர்யம் நிலைக்காமல் இருக்கிறது என்றால் இந்த பதிவை நிச்சயம் பாருங்கள். பொதுவாக எதிர்மறை ஆற்றல் அதிகரித்தால் வீட்டில் பண கஷ்டம், ஆரோக்கிய குறைபாடு போன்றவை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். இந்நிலையில் நேர்மறை ஆற்றலை நீங்கள் இருக்கும் வீட்டில் அதிகரிக்க மற்றும் வீட்டில் ஐஸ்வர்யம் பெறுக இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இதனை செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

முதலாவது, பஞ்ச பூதங்களையும் அடக்கி வைத்து நல்லதை  செய்யக்கூடிய பஞ்ச முக ருத்ராட்சம். இரண்டாவதாக, பச்சை கற்பூரம். இதில் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும். மூன்றாவதாக, குங்கும பூ. இது தேவ லோகத்து பூவாக கருதப்படுகிறது. இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக உங்களது பூஜை அறையில் சிறிய தட்டில் ஐஸ்வர்யத்தை அள்ளிக்கொடுக்கும் மகாலெட்சுமி மற்றும் உங்களுக்கு துணையாக நிற்கும் குலதெய்வத்தையும் மனதார நினைத்து வேண்டி கொள்ளுங்கள்.

இந்த மூன்று பொருட்களையும் மஞ்சள் காட்டன் துணியில் வைத்து கட்டி உங்களது பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்து கொள்ளலாம். இது உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் அதிகரிக்க செய்யும். மேலும், இதனை நிலை வாசலில் மேல் கட்டி வைக்கலாம். இதன் மூலமாக உங்கள் வீட்டிற்குள் யாரேனும் தீய எண்ணங்களுடன் நுழைந்தாலோ, பொறாமை பட்டாலோ அவர்களது பார்வையால் உங்களுக்கு எவ்வித தீங்கும் நேராது. இதில் உள்ள பொருட்களை அடிக்கடி மாற்ற வேண்டாம். பச்சை கற்பூரம் கரைந்துவிட்டால் அதற்கு பதிலாக வேறு வைக்கலாம். இந்த 3 பொருட்களை சேர்த்து வைத்து உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் பெறுக செய்யுங்கள்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

37 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

45 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

54 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

1 hour ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

1 hour ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago