இந்த 3 பொருளையும் சேர்த்து வைத்தால் எந்த இடத்திலும் ஐஸ்வர்யம் உண்டாகும்..!

Default Image

எந்த இடத்திலும் ஐஸ்வர்யம் உண்டாக சேர்த்து வைக்க வேண்டிய பொருட்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில், தொழிலில் தீயவர்களின் பார்வையால் ஐஸ்வர்யம் நிலைக்காமல் இருக்கிறது என்றால் இந்த பதிவை நிச்சயம் பாருங்கள். பொதுவாக எதிர்மறை ஆற்றல் அதிகரித்தால் வீட்டில் பண கஷ்டம், ஆரோக்கிய குறைபாடு போன்றவை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும். இந்நிலையில் நேர்மறை ஆற்றலை நீங்கள் இருக்கும் வீட்டில் அதிகரிக்க மற்றும் வீட்டில் ஐஸ்வர்யம் பெறுக இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக வைக்க வேண்டும். இதனை செய்தால் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

முதலாவது, பஞ்ச பூதங்களையும் அடக்கி வைத்து நல்லதை  செய்யக்கூடிய பஞ்ச முக ருத்ராட்சம். இரண்டாவதாக, பச்சை கற்பூரம். இதில் நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும். மூன்றாவதாக, குங்கும பூ. இது தேவ லோகத்து பூவாக கருதப்படுகிறது. இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக உங்களது பூஜை அறையில் சிறிய தட்டில் ஐஸ்வர்யத்தை அள்ளிக்கொடுக்கும் மகாலெட்சுமி மற்றும் உங்களுக்கு துணையாக நிற்கும் குலதெய்வத்தையும் மனதார நினைத்து வேண்டி கொள்ளுங்கள்.

இந்த மூன்று பொருட்களையும் மஞ்சள் காட்டன் துணியில் வைத்து கட்டி உங்களது பீரோ அல்லது பணப்பெட்டியில் வைத்து கொள்ளலாம். இது உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் அதிகரிக்க செய்யும். மேலும், இதனை நிலை வாசலில் மேல் கட்டி வைக்கலாம். இதன் மூலமாக உங்கள் வீட்டிற்குள் யாரேனும் தீய எண்ணங்களுடன் நுழைந்தாலோ, பொறாமை பட்டாலோ அவர்களது பார்வையால் உங்களுக்கு எவ்வித தீங்கும் நேராது. இதில் உள்ள பொருட்களை அடிக்கடி மாற்ற வேண்டாம். பச்சை கற்பூரம் கரைந்துவிட்டால் அதற்கு பதிலாக வேறு வைக்கலாம். இந்த 3 பொருட்களை சேர்த்து வைத்து உங்கள் வீட்டில் ஐஸ்வர்யம் பெறுக செய்யுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்