உங்கள் வீட்டு பீரோவில் இதனுடன் ஜாதிக்காய் இருந்தால் போதும்..!பணம், செல்வம் பலமடங்காக அதிகரிக்கும்..!

Default Image

உங்கள் வீட்டு பீரோவில் இதனுடன் ஜாதிக்காய் இருந்தால் பணம், செல்வம் பலமடங்காகஅதிகரிக்கும்.

தொடர்ந்து பல்வேறு பண பிரச்சனைகளை சந்தித்து வருகிறீர்களா? அப்போது இந்த முறையை பின்பற்றினால் போதும் உங்கள் வீட்டில் பணம் குவிய தொடங்கும். இதற்கு தேவையான முக்கிய பொருள் ஜாதிக்காய். பொதுவாகவே ஜாதிக்காய் முகப்பொலிவிற்கு உதவியானது என்று அனைவருக்கும் தெரிந்ததே. ஜாதிக்காய் முகத்தில் எப்படி பிரகாசத்தை கொண்டு வருகிறதோ வீட்டில் உள்ள இருளை நீக்கி பிரகாசமாக வைக்கவும் இது உதவும். முதலில் 3 ஜாதிக்காய்களை எடுத்து கொள்ளுங்கள். அதனை ஒரு மஞ்சள் துணியில் வைத்து அதனுடன் உங்களிடம் இருக்கும் குண்டுமணி தங்கத்தை வைக்க வேண்டும்.

சிறிய தங்க மூக்குத்தி இருந்தால் கூட போதும். இதனை முடிந்து உங்கள் வீட்டு பீரோவில் வைக்க வேண்டும். அவ்வளவு தான் உங்கள் வீட்டு பீரோவில் பணவரவு அதிகரிக்க தொடங்கும். செல்வம் சேருவதற்கு இந்த ஜாதிக்காய் உதவி செய்யும். இதேபோல் நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உள்ள கல்லாப்பெட்டியில் 2 ஜாதிக்காய்களை வைக்கலாம். இது தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வீட்டின் சமையல் அறையில் 1 ஜாதிக்காய் இருந்தால் உணவிற்கும், தானியங்களுக்கும் பஞ்சம் ஏற்படாது. எளிமையாக இருக்கும் இந்த ஜாதிக்காய் வைத்தால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் என்று தெரிந்திருப்பீர்கள். நீங்களும் செய்து பலன் பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்