மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வேண்டும் – நடிகை கங்கனா ராணவத்

Default Image

மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வேண்டும்.

பிரபல நடிகையான கங்கனா ரனவத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் விதமாக கூறியுள்ள கருத்து தற்போது பேசும் பொருளாகி உள்ளது. ஆதாவது மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு சலோனி கவுர் என்ற நகைச்சுவை நடிகை நடிகை கங்கனா ராணவத்துக்கு உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரர், ஒரு சகோதரி என மூன்று பேர் என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

இந்த நடிகையின் கருத்துக்கு, கங்கணா ராணவத் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘என்னுடைய தாத்தா உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 பேர். அந்த காலத்தில் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வார்கள். அதில் பலர் இறந்து போவார்கள். அப்போது காட்டில் வசித்தார்கள், அதனால் ஆபத்து அதிகம். ஆனால் நாம் அப்போது இருப்பது போலவே இப்போதும் இருக்க முடியுமா என்ன? காலத்துக்கு ஏற்றவாறு நாம் மாற வேண்டும். இப்போது நாம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட வேண்டும் என்றும், அதற்கு சீனாவில் இருப்பது போல கடுமையான சட்டங்கள் தேவை என்றும் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்