அமெரிக்காவில் ஐந்து நிமிடங்களில் கொரோனா தொற்று இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறிய ஒரு புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அபாட் லேபாரட்டரீஸ் உருவாக்கிய இந்த சோதனை கருவியை பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து துறை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் இருந்தால் 5 நிமிடங்களிலும், இல்லாவிட்டால் 13 நிமிடங்களிலும் முடிவுகளை தெரிவிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு சிறிய டோஸ்டரின் அளவு மற்றும் மூலக்கூறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த சோதனை கருவி 13 நிமிடங்களுக்குள் எதிர்மறையான முடிவுகளைக் கொடுக்கிறது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான பெரிய அளவிலான நோயறிதல் முடிவுகளை இந்த சோதனை மேம்படுத்தும் என்று அபாட் தலைவரும், தலைமை இயக்க அதிகாரியுமான ராபர்ட் ஃபோர்டு கூறினார். வைரஸ் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் மருத்துவமனைகளுக்கு வெளியே இந்த சோதனையை பயன்படுத்தப்படலாம் என ஃபோர்டு தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சோதனை கருவியை அனுப்ப எஃப்.டி.ஏ உடன் அபோட் ஆய்வகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த சோதனை எஃப்.டி.ஏ-வால் அங்கீகரிக்கப்படவில்லை, மேலும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளால் மட்டுமே அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுகையில், உலகில் எங்கும் இல்லாத வகையில் நாள்தோறும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறோம். அடுத்த இரு வாரங்களில் இது அதிகரித்து, உலகில் அதிகமான மருத்துவப் பரிசோதனை செய்யும் நாடாக அமெரிக்கா இருக்கும் என குறிப்பிட்டார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…