விளையாட்டு வீரர்கள் தேசிய கீதத்தை அவமதித்தால், அந்த போட்டியை நான் பார்க்க மாட்டேன்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒருபக்கம் அதிகரித்து வருகிற நிலையில், கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட், காவல்துறை அதிகாரியால் இரக்கமற்ற நிலையில், கழுத்து நெரித்து கொல்லப்பட்டதை எதிர்த்து, அங்கு போராட்டம் வெடித்துள்ளது.
இந்நிலையில், முழங்காலிட்டு அமர்வதே நிறவெறிக்கு எதிரான செய்கையாக மாறியுள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள் பயிற்சியின் போது முழங்காலிட்டு, நிறவெறிக்கு எதிரான தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க கால்பந்து சங்கம், தேசிய கீதம் இசைக்கும் போது, வீரர்கள் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி உள்ளது. இதனையடுத்து, கொரோனா தாக்கத்திற்கு பின், விளையாட்டுப்போட்டிகள் தொடங்கும் போது வீரர்கள் முழங்கால்படியிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதுகுறித்து, தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘விளையாட்டு வீரர்கள் தேசிய கீதத்தை அவமதித்தால், அந்த போட்டியை நான் பார்க்க மாட்டேன் .’ என தெரிவித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…