ஊரடங்கை பின்பற்றாவிட்டால் ஜூன் 30 -க்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படும் – உத்தவ் தாக்கரே

Published by
Castro Murugan

மஹாராஷ்டிராவில் ஊரடங்கை  மக்கள் பின்பற்றாவிட்டால் ஜூன் 30 -க்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர்  எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.87 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது .இதில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது மஹாராஷ்டிராவில் இன்று மட்டும் 3,607 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இன்று மட்டும் 152 பேர் இறந்துள்ளனர்.இதுவரை  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,648 ஆக அதிகரித்துள்ளது ,மேலும் இறப்பு எண்ணிக்கை 3,590 ஆக உயர்ந்துள்ளது .

இந்நிலையில் நேற்று மஹாராஷ்டிரா முதல்வர்  உத்தவ் தாக்கரே அம்மாநில  மக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது ஜூன் 30 தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை  அறிவித்துள்ளது.இதை மக்கள் பின்பற்றாவிட்டால் ஜூன் 30 க்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே   எச்சரித்துள்ளார்.

ஆனால் மக்கள் தங்கள் நலனைக் கவனித்துக்கொள்வதால் அரசாங்கத்தின் விதிகளையும் வழிகாட்டுதல்களையும் மக்கள் கேட்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று (புதன்கிழமை) தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும்,கட்டுப்படுத்தாத மண்டல பகுதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்ட்டுள்ளது.இதில் டாக்ஸிகள், ஆட்டோ, நிபந்தனைகளுடன் கூடிய தனிப்பட்ட வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது .அரசு அலுவலங்களில் 15% ஊழியர்கள் மற்றும் தனியார் அலுவலங்களில் 10% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் அலுவலகங்களுக்கு வருவோர்க்கு வெப்ப பரிசோதனை மற்றும்  சமுக இடைவெளியுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .

 

Published by
Castro Murugan

Recent Posts

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

2 mins ago

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

34 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

46 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

1 hour ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

1 hour ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

1 hour ago