“மாற்றத்தை சிந்திக்கும் தலைவன் .! ரஜினியின் அரசியல் வருகை குறித்து ஒட்டப்பட்ட போஸ்ட்ர்.!

Published by
Ragi

ரஜினியின் அரசியல் வருகையை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளால் ஒட்டப்பட்ட போஸ்ட்ர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.கொரோனா படத்தின் படப்பிடிப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவரின் அரசியல் வருகைக்காக ரசிகர்கள் பலர் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் இவர் நவம்பரில் கட்சி தொடங்கவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு முதல் அரசியலில் தீவிரமாக இறங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே நடிகர் ராகவா லாரன்ஸூம் நவம்பரில் நல்ல சேதி வரும் என்றும், குருவான ரஜினியின் ஆன்மீக அரசியலில் செல்ல தயார் என்றும் கூறியதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ரஜினியின் வருகை முன்னிட்டு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் போஸ்ட்ர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதில் ‘மாற்றத்தை சிந்திக்கும் மக்களும், மக்களை பற்றி சிந்திக்கும் தலைவனும் ஒன்றிணைந்தால்.. அரசியல் மாற்றம்.! ஆட்சி மாற்றம்! இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை’ என்ற வாசகங்களுடன் ஒட்டியுள்ள போஸ்ட்ர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Ragi

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago