அரிசியை வைத்து நம்மால் சோறு, கஞ்சி, மற்றும் கூழ் ஆகிய இவைகள் மட்டும் தான் செய்ய முடியும். ஆனால், அதே அரிசியில் சுவையான உப்புமா செய்வது எப்படி என்று தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அரிசியைப் போட்டு தொட்டால் சுடும் அளவுக்கு வறுத்து கொள்ளவும். அதன் பின்பு அதை மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்தில் அரைத்து எடுக்கவும். அதன்பின் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
நன்றாக வதங்கிய பின்பு தேங்காயை போடவும். அதன் பின்பு இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொஞ்ச நேரம் கொதிக்கவிடவும். கொதித்தவுடன் அதில் உப்பு, கருவேப்பிலை போட்டு அதனுடன் அரைத்து வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும். அவ்வப்போது கிளறி விடவும். பத்து நிமிடத்தில் எடுத்துப் பார்த்தால் சுவையான உப்புமா தயார்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…