“ஜோ பைடன் வெற்றி பெற்றாலும் ஆளும் அதிகாரம் கமலா ஹாரிஸ் கைக்குதான் செல்லும்!”- டிரம்ப்

Default Image

அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றாலும் அமெரிக்காவை ஆளும் அதிகாரம் கமலா ஹாரிஸ் கைக்குதான் செல்லும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 80 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்.

மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர்களின் கூட்டணியை அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து விமர்சித்து கொண்டே வருகிறார்.

இந்தநிலையில், அமெரிக்காவில் உள்ள நெவாடா பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்பொழுது உரையாற்றிய அவர், ஜோ பைடன், 47 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் செய்ய முடியாததை நான் வெறும் 47 செய்து முடித்ததாக தெரிவித்து, பெருமிதம் கொண்டார்.

அதுமட்டுமின்றி, அமெரிக்க அரசியல் வரலாற்றில் மிக மோசமான வேட்பாளராக ஜோ பைடன் இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றாலும், அமெரிக்காவை ஆளும் அதிகாரம் கமலா ஹாரிஸ் கைக்குதான் செல்லும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்