மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டிராகன் மீது நான் சார்ந்திருப்பதை முடிப்பேன்.. டிரம்ப்..!

Default Image

வருகின்ற நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம்  வர்ஜீனியாவில் நடந்த தேர்தல் பிரச்சரத்தில் உரையாற்றிய டிரம்ப், அமெரிக்க அதிபராக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சீனாவை சார்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறினார்.

மேலும், சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவியதை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று, அமெரிக்க பொருளாதாரத்தின் நிலை வலுவாக உள்ளது. அப்போதுதான் சீனாவிலிருந்து வைரஸ் வந்தது என்று கூறினார். இதை நாம் மறக்க மாட்டோம்.

நாங்கள் பொருளாதார நடவடிக்கைகள் நிறுத்தி மில்லியன் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றினோம்.  இந்த தொற்றுநோயால் அமெரிக்கா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் காரணமாக இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிர் இழந்துள்ளனர் மற்றும் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

 இதன் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் வேலைகளை இழந்துள்ளனர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அமெரிக்கா  உற்பத்தியை  வல்லரசாக மாற்றுவேன். மேலும், நாங்கள் சீனாவை நம்பியிருப்பதை என்றென்றும் முடிவுக்குக் கொண்டு வருவோன் என்று டிரம்ப் கூறினார்.

 கொரோனா வைரஸுக்குப் பிறகு சீனாவுடனான உறவுகள் தனக்கு பொருந்தாது என்று கூறினார். சீன அதிபர்உடன் எனக்கு நல்ல உறவு இருந்தது.  நாங்கள் ஒரு நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை செய்திருந்தோம், ஆனால் என்னைப் பொறுத்தவரை இது முன்பு போலவே இல்லை என்று அவர் கூறினார்.

அமெரிக்காவும் சீனாவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டன. சீனாவுடனான ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்