பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் பலர் வீட்டில் செய்வார்கள். இந்த இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்வதற்குக் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து சாப்பிடுவார்கள். குறிப்பாக இதில் பலருக்கு மிகவும் பிடித்தது தக்காளி சட்னி தான். இந்த சட்னியை எப்படி அட்டகாசமான சுவையில் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் காய்ந்த மிளகாயை காம்பு நீக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பதாக ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், தக்காளி காய்ந்த மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் சட்டியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் போட்டு தாளிக்கவும்.
பின்பு, மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு அரைத்து வைத்துள்ள சட்னியை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். அவ்வளவுதான் அட்டகாசமான தக்காளி சட்னி தயார். ஒரு முறை இது போல செய்து பாருங்கள்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…