இடா புயல்: நியூயார்க்கில் மழை வெள்ளத்தால் 60 பேர் பலி..!

Default Image

இடா புயல் காரணமாக நியூயார்க்கில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 1 அன்று அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தை இடா புயல் தாக்கியது. இந்த புயலின் தாக்கத்தால் வீடுகள், நகரங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த புயலின் தாக்கத்திற்கு பின்னர் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. சாலைகள், சுரங்கப்பாதைகள், ரயில்வே நிலையங்கள் ஆகியவை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேறாமல் மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நியூயார்க் நகரில்  வெள்ளத்தில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்