இடா புயல்: மழை வெள்ளத்தால் 82 பேர் பலி..!

Default Image

இடா புயல் காரணமாக இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 1 அன்று அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தை இடா புயல் தாக்கியது. இந்த புயலின் தாக்கத்தால் வீடுகள், நகரங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த புயலின் தாக்கத்திற்கு பின்னர் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள், சுரங்கப்பாதைகள், ரயில்வே நிலையங்கள் ஆகியவை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேறாமல் மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நியூயார்க் நகரில்  வெள்ளத்தில் சிக்கி இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாக நியூயார்க் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் இந்த வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. இதனை அடுத்து மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்