இடா புயல்: நியூயார்க்கில் மழை வெள்ளத்தால் 7 பேர் பலி..!

Default Image

இடா புயல் காரணமாக நியூயார்க்கில் நேற்று இரவு பெய்த கனமழை காரணத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தை இடா புயல் தாக்கியது. இந்த புயலின் தாக்கத்தால் வீடுகள், நகரங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த புயலின் தாக்கத்திற்கு பின்னர் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது.

இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அம்மாகாணத்தில் இன்று இரவு முதல் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. சாலைகள், சுரங்கப்பாதைகள், ரயில்வே நிலையங்கள் ஆகியவை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேறாமல் மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நியூயார்க் நகரில் நேற்று இரவு இந்த வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்