“நான் கொரோனா தடுப்பூசியை போடமாட்டேன்” – அதிபரின் சர்ச்சையான பேச்சு!

Published by
Surya

நான் கொரோனா தடுப்பூசியை போடமாட்டேன் எனவும், அது எனது உரிமை என பிரேசில் நாட்டு அதிபர் போல்சோனாரோ தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் உலகளவில் பல நாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியா, அமெரிக்கா உட்பட நாடுகள் தீவிரமடைந்துள்ளது. தடுப்பூசி முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட பின், அதனை மக்களுக்கு செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பில் உலகளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பிரேசிலில் இதுவரை 62,38,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,71,998 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக அந்நாட்டு மக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக பின்பற்றி வருகின்றனர். இந்தநிலையில், பிரேசில் அதிபர் ஜேயிர் போல்சோனாரோ, நான் கொரோனா தடுப்பூசியை போடமாட்டேன் எனவும், அது எனது உரிமை என ஒரு உரையாடலின் போது தெரிவித்துள்ளார். அதிபரின் இந்த பேச்சு, சர்ச்சையானது.

அதிபர் போல்சோனாரோ, கொரோனா வைரஸ் ஒரு சிறிய காய்ச்சல்தான். அதற்கு ஊரடங்கு தேவையில்லை என பேசியது, உலகளவில் சர்ச்சையானது. அதனைதொடர்ந்து அவர், பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணியாமல் செல்வார். இதன்காரணமாக அவருக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜூலை 25-ம் தேதி நடத்தப்பட்ட 4-வது பரிசோதனையில், அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததையடுத்து, கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலுமாக குணமடைந்தார்.

Published by
Surya

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

12 hours ago

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

13 hours ago

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

14 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

14 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

15 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

17 hours ago