நான் கொரோனா தடுப்பூசியை போடமாட்டேன் எனவும், அது எனது உரிமை என பிரேசில் நாட்டு அதிபர் போல்சோனாரோ தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் உலகளவில் பல நாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியா, அமெரிக்கா உட்பட நாடுகள் தீவிரமடைந்துள்ளது. தடுப்பூசி முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட பின், அதனை மக்களுக்கு செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பில் உலகளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பிரேசிலில் இதுவரை 62,38,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,71,998 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக அந்நாட்டு மக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக பின்பற்றி வருகின்றனர். இந்தநிலையில், பிரேசில் அதிபர் ஜேயிர் போல்சோனாரோ, நான் கொரோனா தடுப்பூசியை போடமாட்டேன் எனவும், அது எனது உரிமை என ஒரு உரையாடலின் போது தெரிவித்துள்ளார். அதிபரின் இந்த பேச்சு, சர்ச்சையானது.
அதிபர் போல்சோனாரோ, கொரோனா வைரஸ் ஒரு சிறிய காய்ச்சல்தான். அதற்கு ஊரடங்கு தேவையில்லை என பேசியது, உலகளவில் சர்ச்சையானது. அதனைதொடர்ந்து அவர், பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணியாமல் செல்வார். இதன்காரணமாக அவருக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜூலை 25-ம் தேதி நடத்தப்பட்ட 4-வது பரிசோதனையில், அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததையடுத்து, கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலுமாக குணமடைந்தார்.
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…