வனிதாவின் கணவரான பீட்டர் பவுல் என்பவரது முதல் மனைவியான எலிசபெத் தனக்கு கணவர் வேண்டும் என்றும், விவாகரத்து அல்ல என்றும் கூறியுள்ளார்.
இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து செய்து கொண்ட வனிதா விஜயகுமார் கடந்த சனிக்கிழமையன்று நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பீட்டர் பவுலின் முதல் மனைவி எலிசபெத் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் தன்னை விவாகரத்து செய்யாமலையே தனது கணவர் திருமணம் செய்து கொண்டதாக கூறி புகார் செய்திருந்தார்.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, பீட்டர் பவுல் விவாகரத்து செய்யாமல் யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என்றும், அவ்வாறு செய்தால் தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று எழுதி கொடுத்துள்ளதாக எலிசபெத் கூறியுள்ளார். மேலும் பீட்டர் பவுலுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. அதனால் அவரை இருமுறை மறுவாழ்வு மையத்தில் சேர்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனது மகனின் படிப்பிற்காக தான் தனது அம்மா வீட்டில் இருப்பதாக கூறிய எலிசபெத், தனது மகள் அப்பா வேண்டும் என்று கூறுவதாகவும் கூறியுள்ளார். மேலும் சில வருடங்களாக பீட்டர் பவுல் வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் எனக்கு கணவரே வேண்டும், விவாகரத்து அல்ல என்று தெரிவித்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…