ரோட்டுக் கடையில் உணவருந்திய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தற்போது இயக்குனர், ஹரி இயக்கத்தில் தனது 33-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தபோது, காயம் ஏற்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பில் இருந்து நடிகர் அருண் விஜய் விலகி இருந்தார். தற்போது காயம் சரியாகி மீண்டும் படப்பிடிப்பில் கொண்டுள்ளார்.
இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பின் போது, மதிய இடைவேளையில் அருகே இருந்த ரோட்டுக் கடையில் நடிகர் அருண்விஜய் உணவருந்த சென்றுள்ளார். அங்கு கடையில் மீன் வறுத்துக்கொண்டிருந்த அம்மாவையே கட்டியணைத்து புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ” ரோட்டுக் கடையில் உணவருந்திய போது. இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன். இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…