ஆப்கானிலிருந்து வெளியேறிய பெண் பத்திரிகையாளர், தனது நாட்டை தான் நேசிப்பதாகவும், ஆனால் நான் பத்திரிகையாளர் என தெரிந்தால் என்னை கொன்று விடுவார்கள் எனவும் அழுதுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கான் நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் தற்பொழுது ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடைபெறுகிறது என அண்மையில் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பெண் பத்திரிக்கையாளர் வஹிடா ஃபைஸி என்பவர் இது குறித்து கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
அப்பொழுது பேசிய அவர், நான் எனது நாட்டை நேசிக்கிறேன்; ஆனால் என்னால் இங்கு இருக்க முடியாது. நான் யார்? என்ன வேலை செய்கிறேன் என அவர்களுக்கு தெரியும், இங்கிருந்தால் நிச்சயம் என்னை கொன்று விடுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இனி நான் இங்கு திரும்பி வரவே மாட்டேன். இனி இது என் நாடு கிடையாது எனவும் அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…
சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…