தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
பொதுவாக விஜய் நடிக்கும் படங்களுக்கு இசை வெளியிட்டு விழா நடைபெறும். அந்த நிகழ்ச்சியின்போது விஜய் ரசிகர்களுக்கு குட்டி கதை மற்றும் தனக்கு தோன்றும் அரசியல் கருத்துக்களை தைரியமாக பேசிவிடுவார். அவர் பேசும் கருத்துக்கள் சில சமயம் தலைப்பு செய்தியாக மாறிவிடும்.
இந்தமுறை இசை வெளியீட்டு விழா வைக்காததால் விஜய்யின் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் இருந்தார்கள். அவர்களை உற்சாகம் படுத்தும் வகையிலும், பீஸ்ட் பட ப்ரோமோஷனுக்காகவும் விஜய் சன் டிவியில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார்.
கிட்டத்தட்ட சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்றார். நேற்று இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. நேர்காணல் நிகழ்ச்சியை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில், நெக்லசன், விஜயிடம், நீங்கள் வெளிநாட்டு ஷூட்டிங்கின் போது, சர்ச் போவதை வாடிக்கையாக வைத்திருந்தீர்கள். உண்மையில் கடவுள் நம்பிக்கை உள்ளவரா நீங்கள் என்றவாறு கேட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய விஜய், ‘ ஆம் எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.
வழக்கமாக தேவாலயம் செலவேன். பிள்ளையார்பட்டி கோவிலுக்கும் செல்வேன், மசூதிக்கும் சென்றுள்ளேன். தேவாலயம் போகும் போகும் போது என்ன தோன்றுமோ அதே போல தான் மற்ற கோவில், மசூதிகளுக்கு செல்லும் போதும் தோன்றும். எம்மதமும் சம்மதம். ‘ என்பது போல தனது தெளிவான பதிலை விஜய் அளித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…