அவரு இல்லைனா நான் ஒண்ணுமே இல்ல! நடிகர் துருவ் விக்ரம் அதிரடி!

Default Image

இயக்குனர் கிரிசாயா இயக்கத்தில், நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதித்ய வர்மா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் துருவ் விக்ரம் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், நான் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று பேசியிருக்கிறேன். ஆனால், இந்த விழா சற்று கூடுதல் சிறப்பு. காரணம் என் குடும்பம் இங்குள்ளது. என் குடும்பத்தினால்தான் நான் இங்கு இருக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் இங்கு இருந்திருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது தநதையை குறித்து கூறுகையில், அப்பா விக்ரம் பற்றி பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. என் அப்பா நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும், அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்கு தெரியும். அவர் இல்லைனா நான் ஒண்ணுமே இல்லை.’ என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்