நான் ராஜபக்சேக்களின் நண்பன் இல்லை. நான் மக்களின் நண்பன் – இலங்கை புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் சூழல் ஏற்பட்டது. ராஜபக்சேக்களின் அரசை எதிர்த்து மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினமா செய்யாமலேயே இலங்கையை விட்டு தப்பிச்சென்றார். அதன் பின்னர் கடிதம் மூலம் அனுப்பி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர், இடைக்கால பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டு, அதிபர் தேர்தல் நடைபெற்று, இலங்கை புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். இதுவரை 6 முறை பிரதமராக இருந்த ரணில் முதன் முறையாக அதிபராகி உள்ளார்.
இந்நிலையில் இன்று அவர் இலங்கை நாடாளுமன்றத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது மக்கள் பாராளுமன்றத்துக்கு வெளியே ரணில் விக்ரம்சிங்கிற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.
இந்நிலையில் அதிபராக பதவியேற்ற பிறகு ரணில், ‘ நான் ராஜபக்சேக்களின் (கோத்தபய, ராஜபக்சே, பசில் ) நண்பன் இல்லை. நான் மக்களின் நண்பன் ‘ என தனது உறுதிமொழியை தெரிவித்தார்/
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…