நான் நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா.? ஏ ஆர் ரஹ்மான்.!

Default Image

ரசிகரின் கேள்விக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். 

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான். இவரின் முதல் திரைப்படத்திற்கே தேசிய விருது கிடைத்தது.

இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் ரசிகர்களால் “இசைப்புயல்” என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற பல பெரிய விருதைகளை பெற்றுள்ளார்.

தற்போது தமிழில், கோப்ரா, பொன்னியின் செல்வன், அயலான், வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் “நீங்கள் எப்போது ஹீரோவாக நடிப்பீர்கள்..?”  என்று கேட்டுள்ளார். அதற்கு ஏ ஆர் ரஹ்மான் “நான் நிம்மதியா இருக்கிறது பிடிக்கலையா?” என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்