COVID-19 வைரஸ் தொற்று காரணமாக ஹுண்டாய் நிறுவனம் மூடப்பட்டது.!

Default Image

தனது ஊழியர் ஒருவருக்கு COVID-19 வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, தென் கொரியாவில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஹுண்டாய் மூடிவிட்டது. தென் கொரியாவில் COVID-19யின் தொற்று அதிகம் இருக்கும் டேகு நகருக்கு அருகில் உள்ள உல்சானில் ஹுண்டாய் நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இதில் ஆண்டு தோறும் 14 லட்சம் கார்களை ஹுண்டாய் நிறுவனம் தயாரிக்கிறது. இங்கு சுமார் 34,000 பேர் பணியாற்றும் இந்த தொழிற்சாலை மூடப்பட்டதை தொடர்ந்து ஹுண்டாயின் பங்குகள் 5 சதவிகித வீழ்ச்சியை சந்தித்துள்ளன. குறிப்பாக சீனாவுக்கு அடுத்தபடியாக தென் கொரியாவில் மொத்தம் 2,022 பேருக்கு COVID-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்