ஹைதராபாத் என்கவுன்டர்..! பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு தீர்க்கமான பதில்-நயன்தாரா ..!

Default Image
  • பெண் மருத்துவர் பிரியங்கா கொன்ற வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரையும் நேற்று  போலீசார் என்கவுண்டர் செய்தனர்.
  •  இந்த என்கவுண்டர் வரவேற்புத்தக்கது.ஹைதராபாத் என்கவுன்டர் நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
  • பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு தீர்க்கமான பதில் தெலுங்கானா போலீஸ்  அளித்து உள்ளது எனவும் கூறினார்.

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்கா பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்ட நான்கு பேரும் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற போது போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

தெலுங்கானா போலீசார் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ததற்கு  நாடுமுழுவதும் உள்ள பலர் பாராட்டுகளை தெரிவித்தார்.இந்நிலையில் நேற்று என்கவுண்டர் செய்த போலீசாருக்கு பல திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பாராட்டினர்.

இதை தொடர்ந்து நடிகை நயன்தாரா , பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் என்கவுண்டர் செய்தது வரவேற்புத்தக்கது.ஹைதராபாத் என்கவுன்டர் நியாயமான மனிதமிக்க நடவடிக்கை.பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு தீர்க்கமான பதில் அளித்து உள்ளது தெலுங்கானா போலீஸ் என கூறியுள்ளார்.

Image

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்