“கணவன் , மனைவியாக வாழும் குழந்தைகள் அதிகரிப்பு” போலீஸ் அறிவுறுத்தல்..!!

Default Image

யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, யாழ்பாண மாவட்ட போலீஸ் தெரிவித்துள்ளனர்.

மூத்த போலீஸ்  அத்தியட்சகர் தலைமையில், நேற்று (வெள்ளிக்கிழமை) யாழ். போலீஸ் நிலையத்தில் இடம்பெற்ற யாழ். மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் போது  சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பாக  கூட்டத்தில் பங்கேற்றவர்களால் பேசப்பட்டது.

அப்போது இது குறித்து பதிலளித்த போலீஸ் தரப்பு, யாழ். மாவட்டத்திலுள்ள பெரும் பகுதிகளில் குழந்தை  திருமணங்கள் நடந்து சிறுவர்களும் , சிறுமிகளுக்கு  இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை போலீசார்  முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.

குழந்தை திருமணம் நடத்து  சிறுவர் , சிறுமியர்  இணைந்து வாழ்கின்றவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். இருவரது பெற்றோர் இணக்கமாகச் சென்றாலும் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ்  தரப்பு உறுதிப்படுத்தியுள்ளனர்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்