இட்லி என்பது இந்தியர்களின் பாரம்பரியமான ஒரு உணவாக இருந்தாலும் இட்லியில் 65 செய்ய முடியும் என்பது பலருக்கும் தெரியாது. எப்படி இட்லியில் சுவையான 65 செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் தக்காளியை வெட்டி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் பெரிய வெங்காயம் ஒன்றை பொடி பொடி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் மிளகாய் தூள் மற்றும் கடலை மாவை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து வெட்டி வைத்துள்ள இட்லியை துண்டுகளையும் அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி இந்த கடலை மாவும், மிளகாய் தூளும் கலந்த இட்லியை பொரித்து எடுக்கவும்.
அதன் பின் வேறொரு கடாயில் மீண்டும் சிறிதளவு எண்ணெயை ஊற்றி சீரகம் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி வெங்காயத் துண்டுகள் மற்றும் அரைத்து வைத்துள்ள தக்காளி சாறை ஊற்றி கெட்டியான பதத்திற்கு வதக்கி எடுக்கவும். அதன்பின் பொரித்து வைத்துள்ள இட்லி துண்டுகளை அதில் போட்டு கிளறி விட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் அட்டகாசமான இட்லி 65 வீட்டிலேயே தயார்.
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…
விழுப்புரம் : இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது வரை பாமக நிறுவனராக…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இன்று குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற…