மீன் குழம்பு என்றாலே பலருக்கும் பிடிக்கும். மீன் குழம்பு எப்படி செய்வது என்று பலரும் பல முறைகளில் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மீனில் பூண்டு மசாலா செய்வது மிக அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை எப்படி செய்ய வேண்டும் என தெரியாதவர்கள் எப்படி செய்வது என்று இன்று தெரிந்து கொள்ளலாம்.
முதலில் கடாயில் மிளகு, மல்லி, சோம்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கருவேப்பிலை, ஒரு கைப்பிடி பூண்டு போட்டு வதக்கவும். பூண்டு அதிகளவில் சேர்க்க வேண்டும், அரைத்தும் சேர்க்கலாம். அதன் பின் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கிரேவி பதத்திற்கு கொண்டு வரவும்.
பின் மீனை சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும். தேங்காயில் பால் எடுத்து வைத்து கொள்ளவும். இதில் மீனை போட்டு நன்றாக கிளறி தண்ணீரை சேர்த்து மூடி வைத்து கொள்ள வேண்டும். இறுதியாக தேங்காய்ப்பால் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் அட்டகாசமான மீன் பூண்டு மசாலா தயார்.
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…