மீன் குழம்பு என்றாலே பலருக்கும் பிடிக்கும். மீன் குழம்பு எப்படி செய்வது என்று பலரும் பல முறைகளில் தெரிந்து வைத்திருப்பார்கள். ஆனால் மீனில் பூண்டு மசாலா செய்வது மிக அட்டகாசமான சுவையில் இருக்கும். இதை எப்படி செய்ய வேண்டும் என தெரியாதவர்கள் எப்படி செய்வது என்று இன்று தெரிந்து கொள்ளலாம்.
முதலில் கடாயில் மிளகு, மல்லி, சோம்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கருவேப்பிலை, ஒரு கைப்பிடி பூண்டு போட்டு வதக்கவும். பூண்டு அதிகளவில் சேர்க்க வேண்டும், அரைத்தும் சேர்க்கலாம். அதன் பின் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கிரேவி பதத்திற்கு கொண்டு வரவும்.
பின் மீனை சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும். தேங்காயில் பால் எடுத்து வைத்து கொள்ளவும். இதில் மீனை போட்டு நன்றாக கிளறி தண்ணீரை சேர்த்து மூடி வைத்து கொள்ள வேண்டும். இறுதியாக தேங்காய்ப்பால் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் அட்டகாசமான மீன் பூண்டு மசாலா தயார்.
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…