மாலை நேரத்தில் நாம் டீ, காபி அருந்தும் போது சூடாக போண்டா அல்லது வடை சாப்பிட வேண்டும் என நினைப்பது வழக்கம். அதற்காக கடைகளுக்கு சென்று நாம் வடை வாங்கும் பொழுது சில சமயங்களில் நமக்கு பிடித்தவாறு இருக்காது. ஆனால் வீட்டிலேயே இட்லி மாவு இருந்தால் போதும். அதை வைத்து எப்படி ஈசியாக, ருசியாக போண்டா செய்யலாம் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். அதில் அரிசி மாவு மற்றும் துருவிய தேங்காய், கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து ஒரு 5 நிமிடம் ஊறவிடவும்.
அதன்பின் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் ஏற்கனவே நாம் பிசைந்து வைத்துள்ள இட்லி மாவை சிறு சிறு போண்டாக்களாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் அட்டகாசமான இட்லி மாவு போண்டா வீட்டிலேயே தயார்.
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…