குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் கார்ன். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. எனவே மாலையில் பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சீஸ் மற்றும் கார்னைக் கொண்டு அற்புதமான சுவையில் டோஸ்ட் செய்து கொடுங்கள்.
இதனால், அவர்களது பசி அடங்குவதோடு, அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இங்கு கார்ன் சீஸ் டோஸ்ட்டை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வெங்காயம் – 2 கப் (நறுக்கியது)
குடைமிளகாய் – 1 (நறுக்கியது)
வேக வைத்த ஸ்வீட் கார்ன் – 1 கப்
துருவிய சீஸ் – 1/2 கப்
மிளகுத் தூள் – 1/4டீஸ்பூன்
வெண்ணெய் – 1 ஸ்பூன்
மைதா – 2 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
முதலில் பிரேட் துண்டுகளை வெண்ணெய் தடவி ஒரு கடாயில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கவும். பின், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி மேலும் குடைமிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர், அதில் வேக வைத்த ஸ்வீட் கார்ன் சேர்த்து நன்கு கிளறி இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், மைதா சேர்த்து சில நொடிகள் கிளறி, பின் பால் ஊற்றி நன்கு சாஸ் போன்று ஓரளவு கெட்டியான பின் அதில் காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக சீஸ் சேர்த்து உருக வைக்கவும். அடுத்து பிரட் துண்டுகளை நெய் தடவி தோசைக்கல்லில் டோஸ்ட் செய்து கொள்ளவும். இறுதியில் ஒவ்வொரு பிரட் பிரட் துண்டுகளின் ஒரு பக்கத்திலும், கார்ன் கலவையைப் பரப்பி பரிமாறினால் கார்ன் சீஸ் டோஸ்ட் ரெடி…..
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…