மதிய நேரத்தில் குழம்புகள் எதையாவது வைப்பதற்கு நேரமில்லை என்று வருத்தப்பட வேண்டாம். நாம் வித்தியாசமான சாதங்கள் ஏதாவது செய்தால் நிச்சயம் விரைவாக செய்து முடித்து விட முடியும். இன்று ஆரோக்கியமான காலிஃப்ளவர் புதினா ரைஸ் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
வேக வைத்தல் : முதலில் காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு உப்பு சேர்த்து வெந்நீரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
விழுது : அதன் பின் புதினா மற்றும் பச்சை மிளகாய் இரண்டையும் தண்ணீர் தெளித்து விழுது போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சாதம் : இறுதியாக வாணலியில் எண்ணெய் மற்றும் சிறிதளவு நெய்யை ஊற்றி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை நீங்கியதும் அரைத்த விழுது மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து நன்கு வேகவிடவும். இவை நன்கு வெந்ததும் இறக்கி விடவும். அவ்வளவு தான் இதனுடன் சாதத்தை போட்டு கிளறினால் அட்டகாசமான காலிஃப்ளவர் புதினா சாதம் வீட்டிலேயே தயார். நிச்சயம் ஒருநாள் செய்து பாருங்கள், வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…