அரை மணி நேரத்தில் அருமையான சிக்கன் டிக்கா மசாலா செய்வது எப்படி?

Published by
Rebekal

சிக்கன் என்றாலே பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் சிக்கன் வைத்து சாதாரணமாக கிரேவி செய்து தான் வீட்டில் எல்லாம் சாப்பிடுவோம். இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்திருந்தால், எப்படி அருமையான சிக்கன் டிக்கா மசாலா அரை மணி நேரத்தில் செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • வெங்காயம்
  • தக்காளி
  • முந்திரி
  • சீரகப் பொடி
  • மல்லி தூள்
  • கிராம்பு
  • பட்டை தூள்
  • ஏலக்காய் பொடி
  • வெண்ணெய்
  • எண்ணெய்
  • உப்பு
  • தயிர்
  • இஞ்சி
  • பூண்டு
  • மிளகாய் தூள்

செய்முறை

முதலில் சிக்கனை எடுத்துக் கொண்டு அவற்றை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதில் தயிர், அரை கப் சீரகப் பொடி, ஒரு டீஸ்பூன் மல்லித் தூள், ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், உலர்ந்த வெந்தய கீரை மற்றும் உப்பு ஆகியவை தேவையான அளவு சேர்த்து நன்றாக கிளறி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பாக சிக்கன் நன்கு ஊறியதும் ஒரு சட்டியில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, எண்ணெய் சூடானதும் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். அரை அளவு வெந்து இருந்தாலே போதுமானது.

அதன்பின் மற்றொரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு தக்காளி சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய வரும் பொழுது முந்திரி சேர்த்து வதக்கி இறக்கி வைத்துவிட்டு இந்த கலவையை நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் போல எடுத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கிராம்பு, பட்டை தூள், ஏலக்காய் பொடி ஆகியவை சேர்த்து நன்றாக தாளித்து அதனுடன் சீரகப் பொடி, மல்லி தூள் சேர்த்து கிளறி விடவும்.

பின் அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி பேஸ்டை எடுத்து இதனுடன் சேர்த்து சில நிமிடங்கள் கிளறி ஊற, வைத்துள்ள சிக்கனை வைத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை இதில் சேர்க்கவும். பின் அதனுடன் உப்பு மற்றும் க்ரீம் சேர்த்து லேசாக கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் அட்டகாசமான சிக்கன் டிக்கா மசாலா வீட்டிலேயே தயார்.

Published by
Rebekal

Recent Posts

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

23 minutes ago

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…

51 minutes ago

ஜிவி பிரகாஷுடன் டேட்டிங்கா? டென்ஷனாகி விளக்கம் கொடுத்த திவ்யா பாரதி!

சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…

1 hour ago

live : தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…

2 hours ago

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை…

3 hours ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

3 hours ago