தினமும் காலையில் ஏதாவது வித்தியாசமாக குழந்தைகள் மற்றும் வீட்டிலுள்ளவர்களுக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவார்கள். காலையிலேயே இட்லி செய்து சாப்பிடுவது தென் இந்தியர்களின் வழக்கமான உணவாக மாறிவிட்டது. இந்த இட்லியை எப்படி வித்தியாசமான முறையில், அட்டகாசமான சுவையில் தயாரிப்பது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ரவை மாவு : ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு ரவை எடுத்துக் கொண்டு அதனுடன் தயிர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தாளிப்பு : அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சிறிது நெய் சேர்த்துக் கொள்ளவும். அதன் பின்பு எண்ணெய் சூடானதும் அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, சீரகம், மற்றும் பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
மாவு கலவை : தாளித்த பொருட்கள் அனைத்தையும் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின்பு இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவை சிறிது நேரம் வைத்திருக்கவும். அதன் பின்பு இட்லி தட்டில்இட்லி மாவை ஊற்றி வேக வைக்க வேண்டும். அவ்வளவுதான் அட்டகாசமான ரவா இட்லி வீட்டிலேயே தயார். நிச்சயம் ஒரு முறை செய்து பாருங்கள், அடிக்கடி செய்வீர்கள்.
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…