நண்டு என்றாலே பிடிக்காதவர்கள் இருக்க முடியாது, அட்டகாசமான சுவை நாக்கில் அப்படியே வைத்திருக்க கூடிய குணம் கொண்ட நண்டை வைத்து எவ்வாறு தொக்கு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
முதலில் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் இஞ்சி பூண்டு விழுதையும் அதனுடன் பச்சை மிளகாயையும் இரண்டாக உடைத்து போட்டு நன்றாக வதக்கவும். இவை இரண்டின் பச்சை மணம் போனதும் வெட்டி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி பொன்னிறமானதும் தக்காளியை சேர்த்து அதற்காக சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் மல்லித்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள் ஆகியவை சிறிதளவு சேர்த்துக் கொண்டு நன்றாக கிளறி விடவும்.
பின், ஏற்கனவே சுத்தம் செய்து வைத்துள்ள நண்டுகளை துண்டு துண்டாக உடைத்து இந்த மசாலா கலவையில் போட்டு நன்கு கிளற வேண்டும். இரண்டு நிமிடம் மட்டும் மசாலாவில் அப்படியே வேக வைத்து விட்டு, ஒரு டம்ளர் மட்டும் தண்ணீர் விட்டு மூடி வைத்து ஒரு பத்து நிமிடம் வேக வைக்கவும். நன்கு வெந்ததும் நண்டில் உள்ள நீர் வெளியேறும் அந்த நீரே சுவையை கொடுக்கும். எனவே அதிக அளவில் நீர் பயன்படுத்த தேவையில்லை நன்கு கிளறி விட்டு லேசாக கருவேப்பிலை தூவி அடுப்பை அணைத்து விட்டு 5 நிமிடம் கழித்து எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான நண்டு தொக்கு தயார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…