சுவையான வாழைப்பூ வடை செய்வது எப்படி?

Published by
Sharmi

இன்று சுவையான வாழைப்பூ வடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். 

பொதுவாகவே வாழை மரத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருகிறது. வாழை மரத்தின் இலை, பூ, கனி, தண்டு என்று அனைத்தும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழைப்பூ வைத்து அருமையாக வடை செய்வது எப்படி என்று இன்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ – 1, கடலை பருப்பு – 3/4 கப், உளுத்தம் பருப்பு – 2 மேஜைக்கரண்டி, அரிசி – 2 மேஜைக்கரண்டி, வெங்காயம் – 1/4 கப், பெருங்காயம் – 1/8 டீஸ்பூன், ஜீரகம் – 1 டீஸ்பூன், சிகப்பு மிளகாய் – 4, கருவேப்பிலை, கொத்தமல்லி நறுக்கியது – 3 மேஜைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை:

முதலில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை ஒன்றாக 3 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். பின்னர் தண்ணீரை வடித்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து மிளகாய், ஜீரகம், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை பொடி செய்து கொள்ளுங்கள். பிறகு, ஊறவைத்த பருப்பை தண்ணீர் சேர்க்காமலும், சேர்த்தும் என இரண்டு விதமாக அரைத்து வைத்து கொள்ளுங்கள். மசாலா வடைக்கு அரைப்பதை விட சற்று நைசாக அரைத்து கொள்ளலாம். இதன் பின்னர் வாழைப்பூவை சுத்தம் செய்து அரிந்து, அதனை தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள பருப்பு, வாழைப்பூ, நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் பிசைந்த மாவை வடைபோல் அதில் போட வேண்டும். மிதமான தீயில் வடையை பொரித்து கொள்ளுங்கள். சூடான, மொறுமொறுப்பான சுவையான வாழைப்பூ வடை தயார்.

Published by
Sharmi

Recent Posts

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு  மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…

9 hours ago

இனி இப்படிதான்! ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு!! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.!

கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…

10 hours ago

“வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ரஹானே”… கேப்டனை மாற்றியது ஏன்? கேகேஆர் விளக்கம்.!

டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…

12 hours ago

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

12 hours ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

14 hours ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

14 hours ago