பாகற்காயில் மாலை நேர ஸ்நாக்ஸான பாகற்காய் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.இதற்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
சூடான டீ-யுடன் மாலை நேர ஸ்நாக்ஸ் இல்லையென்றால் நன்றாக இருக்காது .அந்த வகையில் இன்று மாலை நேர ஸ்நாக்ஸ் என்னவென்றால் பாகற்காய் சிப்ஸ் தான் .அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பாகற்காயில் உள்ள கசப்பை மாற்றுவதற்காக அதனை வட்ட வட்டமாக முதலில் நறுக்கி வைக்கவும்.அதன் பின் நறுக்கி வைத்துள்ள பாகற்காயில் மஞ்சள் தூள்,உப்பு மற்றும் தயிர் சேர்த்து கலந்து ஊற வைக்கவும் . அடுத்து 15 நிமிடங்களுக்கு பிறகு ஊற வைத்த பாகற்காயை நன்கு தண்ணீர் விட்டு கழுவ வேண்டும்.அதன் பின் பாகற்காயில் உள்ள நீர் போகும் அளவிற்கு வடிகட்ட வேண்டும்.
அதன்பின் கடலை மாவு, அரிசி மாவு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், நசுக்கிய பூண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீரை வடிகட்டிய பாகற்காயுடன் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டும்.
பின் ஒரு கடாயை எடுத்து அதனை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கிய பின்னர் பிசைந்து வைத்துள்ள பாகற்காயை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.தற்போது சுவையான மொரு மொருவான பாகற்காய் சிப்ஸ் தயார் .
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…