பிரியாணி என்றாலே பெரும்பாலும் பலருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவு. சிக்கன், மட்டன் அல்லது காய்கறிகளை வைத்து பிரியாணி செய்வது தான் வழக்கமாக நாம் சாப்பிடக்கூடிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் வெறும் முருங்கைக்காயை வைத்து மட்டும் பிரியாணி சுவையாக செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? எளிதில் அட்டகாசமான முறையில் முருங்கைக்காய் பிரியாணி செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
விழுது : முதலில் முந்திரிப் பருப்பு, இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள், தக்காளி ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தாளிப்பு : அதன் பின்பு குக்கரில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள விழுதை அதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். அதன் பின்பு 15 நிமிடம் ஊற வைத்து எடுத்த பாசுமதி அரிசி மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடி விடவும்.
சாதம் : லேசாக ஆவி வந்ததும் குக்கரை திறந்து முருங்கைக்காயை இதனுடன் சேர்த்து விடவும். ஏனென்றால் முன்பே முருங்கைக்காயை சேர்த்தால் கரைந்துவிடும். ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பொரித்து எடுத்து குக்கரில் உள்ள பிரியாணி மீது தூவி கிளறிவிடவும். அவ்வளவு தான் அட்டகாசமான முருங்கைக்காய் பிரியாணி வீட்டிலேயே தயார். ஒரு முறை செய்து பாருங்கள்.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…