கத்தரிக்காயை வைத்து எப்படி வித்தியாசமான முறையில் அட்டகாசமான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணை ஊற்றி அதனுடன் சீரகம், சோம்பு மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கவும். அதன் பின்பு தக்காளி ஒன்று சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். தொக்கு போல தயாரானதும் தேங்காய் துருவல் 2 ஸ்பூன் சேர்த்து இவற்றை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்பாக கத்தரிக்காயின் காம்புகளை மட்டும் வெட்டி விட்டு நான்கு துண்டுகளாக வெட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காய் நன்கு பொரிந்து வந்ததும் அதே எண்ணெயில் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து தாளித்து, வெங்காயம், பெருங்காயம் ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள விழுதை இதில் சேர்த்து லேசாக புளிக்கரைசல் சேர்த்து குழம்பு போல நன்கு கொதிக்கவிடவும். அதன் பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொண்டு ஏற்கனவே நாம் பொரித்து வைத்துள்ள கத்திரிக்காயை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் அட்டகாசமான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு வீட்டிலேயே தயார்.
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…
சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…
சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…