வெறும் உருளைக்கிழங்கை வைத்து சில மசாலாக்களை சரியான பதத்தில் கலந்து அருமையான சுவையுடன் பொரித்து விற்கப்படக்கூடிய உருளைக்கிழங்கு பொரியலை தான் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் என அழைக்கிறோம். கடைகளில் நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் கொடுத்து வாங்க கூடிய ஃப்ரெஞ்ச் ப்ரைஸை வீட்டிலேயே நாம் சுவையாக செய்யலாம். எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கேற்ப தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனை நீளவாக்கில் மெல்லியதாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துண்டுகளை ஒரு கிண்ணத்தில் சேர்த்து இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்பதாக ஒரு இட்லி பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து இட்லி தட்டில் லேசாக எண்ணெய் சேர்த்து வெட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகள் ஒவ்வொரு வைத்து லேசாக அவித்து எடுத்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பதாக ஒரு அகலமான பாத்திரத்தில் இந்த அவித்த உருளைக்கிழங்குகளை கொட்டி ஒரு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும். அதன் பின்னதாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சூடாகியதும் ஏற்கனவே நம் பிரட்டி வைத்த உருளைக் கிழங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்து எடுத்தால் அட்டகாசமான ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் வீட்டிலேயே தயார்.
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…