தேங்காய் இல்லாமல் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அட்டகாசமான குருமா எப்படி செய்வது?

Published by
Rebekal
எப்பொழுதுமே நான் தோசை, இட்லிக்கு சட்னி அல்லது குருமா செய்தாலும் நிச்சயமாக தேங்காய் பொட்டுக்கடலை சேர்த்து தான் நாம் செய்வோம். ஆனால், உங்கள் வீட்டில் பொட்டுக்கடலை மட்டும் இருந்தாலே போதும் காலை நேரத்தில் உங்கள் தோசை, இட்லிக்கு அட்டகாசமான குருமாவை பத்து நிமிடத்தில் செய்து அசத்தலாம். இதை சப்பாத்தி மற்றும் பூரிக்கு கூட வைத்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என தெரிந்து கொள்ள வேண்டுமா, வாருங்கள் அறியலாம்.

தேவையான பொருட்கள்

  • சோம்பு
  • பச்சைமிளகாய்
  • வெங்காயம்
  • எண்ணெய்
  • கசகசா
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • தக்காளி
  • மஞ்சள்தூள்
  • மிளகாய்த்தூள்

செய்முறை

முதலில் மிக்ஸி ஜார் எடுத்துக்கொண்டு அதில் பொட்டுக்கடலை, சோம்பு மற்றும் கசகசா ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பொடி போல நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கட்டி படாமல் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி ஆகியவை சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து அனைத்தும் நன்றாக வதங்கி வந்ததும் பொட்டுக் கடலையை கரைசலை ஊற்றி நன்றாக கலந்து 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால் அட்டகாசமான குருமா வீட்டிலேயே தயார். ஒருமுறை இவ்வாறு செய்து சாப்பிட்டு பாருங்கள் நிச்சயம் அடிக்கடி செய்வீர்கள்.

Published by
Rebekal

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

33 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

38 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

56 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago