சுயநல குணம் உள்ளவர்களா? கண்டிப்பா அவங்களை விட்டு விலகிடுங்க..!இந்த குணம் உள்ளவர்களை தெரிந்து கொள்வது எப்படி?

Published by
Sharmi

சுயநலம் என்பது எல்லோரிடமும் காணப்படும் ஒரு இயல்பென்றாலும் அதன் அளவை பொறுத்து குணம் மாறுபடும். சுயநலம் ஒன்றையே வாழ்க்கையாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இது போன்ற தீய குணமுடையவர்களை எளிதாக அவரவர் சுயரூபத்திலேயே கண்டுபிடிக்கலாம். இது வெளிப்பட்டுவிடும். சுயநல எண்ணம் கொண்டவர்கள் பிடிவாதமாகவும், அவர்களது தேவையை பற்றிய சிந்தனையாகவும் மட்டுமே இருப்பார்கள். அவர்களோடு இருப்பவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்காது. அவர்களை பரிதாபமாக மாற்றிவிடுவார்கள். அதனால் இந்த குணம் கொண்டவர்களை எளிதாக கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

  • அவர்கள் கொடுத்த வாக்குகளை நிறைவேற்ற மாட்டார்கள். வாக்கு சிலவற்றை கொடுத்து விட்டு அதனை அடுத்த நொடியிலேயே ஏமாற்றி விடுவது போல் நடந்து கொள்வார்கள்.
  • அதிகம் பொய் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். சொல்வது ஒன்றுமாய் செயல் ஒன்றுமாய்  இருக்கும். அவர்களால் மற்றவர்களுக்கு ஏதேனும் நன்மை வரப்போகிறது என்றால் உடனடியாக அதனை தடுக்க அதிலிருந்து பின்வாங்கி விடுவார்கள்.
  • அவர்களுக்கு ஒரு உதவி தேவைப்படும்போது உங்களின் பின்னாடியே சுற்றி திரிவார்கள். அவர்களது தேவை முடிந்ததும் சென்று விடுவார்கள். உங்களுக்கு உதவி தேவைப்படும் வேளையில் ஒருபோதும் உதவ முன்வரமாட்டார்கள். அதற்கு பதிலாக அதிலிருந்து தப்பிக்க சாக்கு சொல்வார்கள்.
  • சுயநலவாதிகள் ஒரு நபரிடம் பேசுகிறார்கள் என்றால் அவர்களிடம் இருந்து எதனை பெற முடியும் என்ற எண்ணத்தில் மட்டுமே. மற்றபடி இவர்கள் உணர்ச்சி ரீதியாகவோ உறவு ரீதியாகவோ பழகமாட்டார்கள்.
  • அதிகமாக சுயநலவாதிகள் அனைவரையும் கவர்வதற்காக பெருமை பேசுவார்கள். மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க எதனையும் செய்வார்கள். சரியான ஈகோ பிடித்தவர்களாக இருப்பார்கள்.
  • இவர்கள் பொறாமை குணம் நிறைந்து காணப்படுவார்கள். அதனால் தன்னை விட சிறந்து செயல்படும் ஒருவரின் முதுகில் குத்தவும் தயங்கமாட்டார்கள். சுயநலவாதிகள் உழைக்க விரும்பமாட்டார்கள். ஆனால், மற்றவர் உழைப்பில் நன்றாக வாழ நினைப்பார்கள்.

இது போன்ற குணம் உடையவர்களிடம் பழகாமல் இருப்பது நல்லது. உங்கள் வாழ்வில் சுயநலவாதிகளை நுழைய விடாதீர்கள்.

Recent Posts

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!

வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…

41 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!

துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…

1 hour ago

தமிழ்நாடு பட்ஜெட்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை!

சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…

2 hours ago

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

11 hours ago

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

13 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

13 hours ago