அத்திக்காய் சாப்பிடுவது வயிற்றுப் புண்ணுக்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்த அத்திக்காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொண்டாலே வயிற்றுப்புண் உள்ளவர்கள் பூரண குணமடையலாம். மேலும் இந்த காய் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் மட்டுமல்லாமல் இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, வாயு பிரச்சனை, மூலகிரணி ஆகிய பிரச்சினைகளும் குணமாகும். இந்த அத்திக்காயில் பொரியல் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் அத்திக்காயை எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கி நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு குக்கரில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு ஆகியவற்றை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு இரண்டாக வெட்டிய பச்சைமிளகாய் அதனுடன் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன் பின்பு இதனுடன் பயத்தம்பருப்பு சேர்த்து, இடித்து வைத்துள்ள அத்திக்காயையும் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும் வரை மூடி வைத்து நன்றாக வேகவிடவும். பின் ஒரு சட்டியில் கடுகு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து இந்த அவியலை அதனுடன் சேர்த்து கிளறினால் அட்டகாசமான அத்திக்காய் பொரியல் தயார்.
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…