வாழைத்தண்டு பொதுவாகவே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த வாழை தண்டை சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரக கற்களை கரைக்க உதவுவதுடன், சிறுநீரக எரிச்சலையும் குணப்படுத்த இது உதவுகிறது. மேலும் வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்துவதில் இந்த வாழைத்தண்டு அதிக அளவில் உதவுகிறது. இந்த வாழைத்தண்டை வைத்து எப்படி அருமையான பொரியல் செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முதலில் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். மேலும் வாழைத்தண்டை தோல் நீக்கி சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதன் பின்னதாக வாழைத் தண்டுடன் உப்பு சேர்த்து நன்றாக அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு வதக்கவும். பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் லேசாக வதங்கியதும், வாழைத்தண்டை சேர்த்து வதக்கவும்.
பின்னர் பாசிப் பருப்பை கழுவி அதன் தண்ணீரை இந்த வாழைத்தண்டுடன் சேர்த்து நன்கு கிளறவும். அல்லது சாதாரண தண்ணீரும் ஊற்றலாம். இதனுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து விட வேண்டும்.
நன்றாக அவிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் அட்டகாசமான வாழைத்தண்டு பொரியல் வீட்டிலேயே தயா.ர் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த வாழைத்தண்டை சாப்பிட்டால் விரைவில் சிறுநீரக கோளாறுகள் நீங்கும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் இந்த வாழைத்தண்டு பொரியலை சாப்பிடலாம்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…