பிக்பாஸ் – 4 நிகழ்ச்சிக்காக பிரபல நடிகைக்கு பேசப்பட்ட சம்பளம் இத்தனை கோடியா.?

Published by
Ragi

பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக ஷில்பா மஞ்சுநாத்திடம் சம்பளமாக 1 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஷோ . தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது . தமிழில் மூன்று சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரசிகர்கள் சீசன் 4க்காக காத்திருக்கின்றனர். சமீபத்தில் அதற்கான
புரோமோ வீடியோவை கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்ப உள்ளதாகவும், அதற்கான வேலைகள் மும்முரமாக செயல்பட்டு வருவதாகவும்,போட்டியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த முறை டிக்டாக்கில் கவர்ச்சியில் ரசிகர்களை சூடேத்திய இலக்கியா, ரம்யா பாண்டியன், சனம் ஷெட்டி, வனிதா பிரச்சினைகள் மூலம் மீடியாக்களில் பிரபலமான சூர்யா தேவி, விஜய் டிவி தொகுப்பாளரான கோபி நாத், சீரியல் நடிகை ஷிவானி நாராயணன், நடிகை சுனைனா, ஷாலு ஷம்மு, அதுல்யா, சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த இர்பான் உள்ளிட்ட பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வில்லன், ஜெமினி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை கிரண் ரத்தோட் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 4-ல் ஷில்பா மஞ்சுநாத் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக 1 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் உண்மையா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.

Published by
Ragi

Recent Posts

MI vs LSG: வெற்றி யாருக்கு.? லக்னோ அணியில் களமிறங்கிய மயங்க் யாதவ்.!

மும்பை : லக்னோ மற்றும் மும்பை அணிகள் மாலை 3:30 மணிக்கும், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இரவு 7:30…

11 minutes ago

தவெக பூத் கமிட்டி: கடும் வெயிலில் நிற்கும் தொண்டர்கள்.., பாஸ் இருப்போருக்கு மட்டும் அனுமதி.!

கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…

2 hours ago

‘சச்செட்’ செயலி என்றால் என்ன? மன் கி பாத்தில் பிரதமர் மோடி இதை குறிப்பிட்டது ஏன்.?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…

2 hours ago

“பஹல்காம் தாக்குதல்… ரத்தம் கொதிக்கிறது” – பிரதமர் மோடி ஆவேசம்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

4 hours ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

4 hours ago