புஷ் அப் செய்வது ஒட்டு மொத்த உடலுக்கான உடற்பயிற்சி. இந்த உடற்பயிற்சியை தினமும் மேற்கொள்வதால் உடலுக்கு வலிமை சேர்க்க உதவுகிறது. புஷ் அப் செய்வதில் அதிகளவு நன்மை உள்ளதால் தான் ஜிம்முக்கு செல்லக் கூடிய சாதாரண மனிதர்கள் முதல் மல்யுத்த வீரர்கள் வரை அனைவருமே புஷ்-அப் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். புஷ் அப் ஜிம்முக்கு சென்று தான் செய்ய வேண்டும் என்று கிடையாது.
வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும், வயது வரம்பும் கிடையாது. ஒரு நாளில் எத்தனை புஷ் அப் செய்ய வேண்டும் என்று கேட்டால் கணக்குகள் எதுவும் கிடையாது. ஆனால் உடற்பயிற்சி செய்யக் கூடிய நபர்களிடம் கேட்கும் பொழுது ஒரு ஆரோக்கியமான நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 20 முதல் 25 வரை புஷ்-அப் செய்ய முடியும் எனக் கூறுகிறார்களாம். இருப்பினும் 40 முதல் 50-க்கும் அதிகமாக கூட ஒரு நாளைக்குப் புஷ்-அப் செய்யக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
புஷ் அப் செய்வதால் நமது மேல் உடல் வலுப் பெற உதவுவதுடன், நமது மார்பு, தோள்கள், கைகள் ஆகியவற்றையும் வலுப்படுத்தும். மேலும் வயிற்று தசைகளை குறைப்பதற்கும் அதிக அளவில் இது உதவுகிறது. புஷ் அப் செய்வதன் மூலமாக நமது இதய துடிப்பு வேகமாக துடிக்கிறது. எனவே, நமது இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், ஆக்சிஜன் அளவையும் அதிகரிக்க இது உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் இது எலும்புகளை அதிகளவில் வலுப்படுத்த உதவுகிறது. மேலும், வளைந்துள்ள முதுகெலும்பு நேராகவும் இது பெரிதும் உதவுகிறது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…