‘தலைவி’ படத்தினை OTT-க்கு இத்தனை கோடிக்கு விற்றார்களா.? கங்கனா ரணாவத் வெளியிட்ட தகவல்.!
ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் தலைவி படத்தினை OTT நிறுவனங்களுக்கு 55கோடிக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பலருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தலைவி. இந்த படம் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டதாகும். இதில் ஜெயலலிதா அவர்களாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்பரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை விஜய் அவர்கள் இயக்குகிறார் மற்றும் சாய்லேஷ் சிங், விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் தயாரித்துள்ளனர்.இப்படத்தை தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எடுக்க போவதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் மற்றும் செக்கன்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது மட்டுமில்லாமல் இந்த படத்திற்காக மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக பூர்ணா மற்றும் மது பாலா நடிக்க உள்ளனர். இந்நிலையில் பூர்ணா சசிகலா வேடத்திலும், மதுபாலா எம்ஜிஆரின் மனைவியான ஜானகி அவர்களின் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.மேலும் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தில் அரவிந்த் சாமி, சமுத்திரக்கனி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை 55கோடி ரூபாய்க்கு அமேசான் பிரேம் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் தளத்திற்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் சமீபத்தில் கங்கனா ரணாவத் அளித்த பேட்டியில், திரையரங்குகளில் வெளியிட்ட பின்னரே OTT ல் ரிலீஸ் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…