கொரோனா சிகிச்சைக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக ஹாங்காங் அரசு, அங்குள்ள கண்காட்சி மையத்தை 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையாக மாற்றியுள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நகரமாக இருக்கிறது. ஹாங்காங். இங்கு, கொரோனா பரவ தொடங்கியது முதல் உடனே எல்லைகளில் கட்டுப்பாட்டை அதிகரித்து, போக்குவரத்தை துண்டித்தது.
இதனால், ஜூன் மாதம் வரையில் கொரோனாவை வெகுவாக கட்டுப்படுத்தி வைத்திருந்தது. ஆனால், சென்ற மாதம் ஹாங்காங்கில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தற்போது அந்நகரத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையானது 3,512 ஆக உள்ளது.
மேலும்,சென்ற மாதம் மட்டும் 22 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். மொத்த பலி எண்ணிக்கையானது 34ஆக உள்ளது.
இதனால், கொரோனா சிகிச்சைக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக ஹாங்காங் அரசு, அங்குள்ள கண்காட்சி மையத்தை 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையாக மாற்றியுள்ளது. தற்போது கொரோனா ஹாங்காங் நகரில் வேகமெடுக்க தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…